Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அப்பூர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 9 மாணவர்களைக் கொண்டு பள்ளி காய்கறித் தோட்டம் செயல்பாட்டினை முன்னெடுத்தனர்.
கொத்தவரங்காய், வெண்டைக்காய், கருவேப்பிலை, சுண்டைக்காய், முருங்கைக் கீரை ஆகியவை சேர்த்து உணவு மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது.
இந்த செயல்பாட்டினை பள்ளி தலைமையாசிரியை S.நிர்மலா, ஆசிரியர் தனசேகரன், மேலும் ஹிந்துஜா லைலேண்ட் பினான்ஸ், லேர்னிங் லிங்ஸ் ஃபவுண்டேசன் சார்பில் ஆசிரியை பவித்ரா.ப கல்பனா. P ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்செயல்பாட்டின் மூலம் மாணவர்களுக்கு உணவின், உழவின் முக்கியத்துவம் கற்பிக்கப்பட்டது.காய்கறிகளின் சத்துக்களை மாணவர்கள் அறிந்து, கொண்டனர்.